முருகன் கோயில் மயில்வாகன சிலையை உடைத்த இளைஞர்

திருவானைக்காவல் முருகன் கோயிலில் உள்ள மயில்வாகன சிலையை உடைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவனைக்காவல் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் விக்கி, இவர் அங்குள்ள கோயில் சிலை மற்றும் மின்கம்பத்தில் பொருத்தியிருந்த சுவிச் பெட்டி அகியவற்றை கல்லால் உடைத்த அராஜகம் செய்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version