யோகாவில் உலக சாதனை படைத்த 5ஆம் வகுப்பு மாணவி, பார்வையற்ற மாணவர் ஒருவருக்கு யோகா பயிற்சி அளித்து மீண்டும் சாதித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பிரிஷா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் யோகாவில் இதுவரை 31 உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக குளோபல் யூனிவர்சிட்டி உலகின் முதல் இளம் வயது உலக சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மாணவி பிரிஷா, தான் கற்ற யோகாவை மற்ற மாணவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கணேஷ் குமார் என்ற பார்வையற்ற மாணவனுக்கு யோகா கற்றுக்கொடுத்து சாதித்துள்ளார். அந்த பார்வையற்ற மாணவனும் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளான்.