பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த பெண் விபத்தில் சிக்கினார்

உத்தர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் கூறிய பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

உன்னவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு அந்த பெண் தர்ணாவில் ஈடுபட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த பெண் காரில் சென்றபோது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் அந்த பெண்ணின் தாய், உறவினர் உயிரிழந்த நிலையில், புகார் அளித்த பெண்ணும் அவரது வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version