ஆம்பூர் அருகே பயிர்களைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்

ஆம்பூர் அருகே  ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான மிட்டாளம், மேல்மிட்டாளம், பந்தேரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 15க்கு மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தது. அந்த யானைகள் கடந்த 3 நாட்களாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசமாக்கியதோடு, விவசாயிகளின் குடிசைகளையும் சேதப்படுத்திச் சென்றன. இதனையடுத்து யானைகளைக் காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் வனத்துறையினருடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட  உதவி வருகின்றனர்.

Exit mobile version