தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் நீதிமன்றங்கள் மூலம் 89 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 89 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 283 கோடியே 88 லட்சத்திற்கு இழப்பீடுகள் வழங்கி தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் லோக் அதாலத் இன்று நடைபெற்றது. குற்ற வழக்குகள், வங்கி காசோலை மோசடி, கடன் நிலுவை உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் சிவில் வழக்குகள் உள்ளிட்ட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது. இதில் தற்போது 89 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 283 கோடியே 88 லட்சத்து 35ஆயிரத்து 155ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version