கோவில்பட்டி அருகே விவசாய நிலங்களில் திடீரென ஏற்பட்ட தீ

கோவில்பட்டி அருகே விவசாய நிலப் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால், சுமார் 700 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், சுமார் 700 ஏக்கர் வரையிலான மக்காச்சோளம், பருத்தி, பாசிப்பயிர் மற்றும் சோள பயிர் வகைகள் சேதமடைந்துள்ளன. காற்றின் வேகம் காரணமாக தீ கடுமையாக பரவியதாலும், நிலங்களுக்குள் செல்ல சரியான பாதை இல்லாத காரணத்தாலும் தீயணைப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தும் தீயை சரியான நேரத்தில் அணைக்க முடியாமல் போனது.

இதற்கிடையில் சம்பவ இடத்தில்  அப்பகுதி வட்டாட்சியர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். விபத்து ஏற்பட காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version