பல்லடத்தில் ஓடிக் கொண்டிருந்த காரில் ஏற்பட்ட திடீர் தீ

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஓடிக் கொண்டிருந்த காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பல்லடத்தை அடுத்த கணபதிபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் செம்மிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாரிமுத்து வண்டியை உடனடியாக நிறுத்திவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் வேகமாக வெளியேறினார். தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரிந்து சேதமானது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version