மும்பையில் கட்டி முடிக்கபடாத கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

மும்பையில் கமலா மில்ஸ் அருகில் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் கமலா மில்ஸ் வளாகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதே பகுதியில் தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் யாரும் உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை.

Exit mobile version