ஏர்வாடியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட விநாயகர் சிலை ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சையாக நடந்தது.

நாச்சம்மைபுரம், தோத்தாமகன்சாவடி, மங்களேஸ்வரி ஆகிய பகுதிகளிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் ஏர்வாடியில் ஒன்று சேர்ந்தன. இதனை தொடர்ந்து, இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து, ஏர்வாடி தர்கா வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர், சின்ன ஏர்வாடி கடற்கரையில் சிலைகள் கரைக்கப்பட்டன. a

Exit mobile version