காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டி

காஞ்சிபுரத்தில் தனியார் பயிற்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள டெக்கத்லானில் 3 நாட்களாக குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. 6 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 8 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை காஞ்சி கிங்ஸ் பாக்சிங் அகடாமி அணியினர் தட்டி சென்றனர். பெண்களுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை புதுக்கோட்டை ஆல்டியஸ் போட்ஸ் அகடாமியும், ஆண்கள் பிரிவில் சென்னை கந்தன்சாவடி ஏபிகே பாக்சிங் அகடாமியினரும் கைப்பற்றினர்.

Exit mobile version