சாயல்குடியில் அரசு சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது

சாயல்குடியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பாக மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மற்றும் வட்டார வள மையம் சார்பாக மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 வயது வரையிலான குழந்தைகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவிகள், தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், ஆகியவற்றிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Exit mobile version