கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக ஊருக்குள் முகாமிட்டு வருகின்றன. இந்நிலையில், தலமலை அருகேயுள்ள காந்திநகர் கிராமத்தில் இரவு நேரத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்குள்ள குடிசைகளையும், சுற்றுச்சுவர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் பல மணி நேரம் போராடி யானையை விரட்டினர். ஊருக்குள் சுற்றித்திரியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version