மதுரையில் உலக சாதனை முயற்சிக்காக 7 ஆயிரத்து 500 தமிழ் வார்த்தைகளை, 36 நிமிடங்கள் இடைவிடாமல் பேசி, இளைஞர் ஒருவர் புதிய சாதனை முயற்சி மேற்கொண்டார்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் அஸ்வின் ஆனந்த் என்ற இளைஞர், சமூக வலைதள நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். இதற்கு முன்பு 75 மணி நேரம் தூங்காமல் தொடர் மேடைப் பேச்சு என பல்வேறு சாதனைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் புதிய உலக சாதனை படைப்பதற்காக, 7 ஆயிரத்து 500 தமிழ் வார்த்தைகளை, இடைவிடாமல் தொடர்ந்து முப்பத்தாறு நிமிடம் பேசி அசத்தினார். இவர் செய்த சாதனையை வீடியோ மூலம் பதிவு செய்து, உலக சாதனையாளர் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.