ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு ஆ.ராசாவுக்கு தகுதியில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கருணாநிதி செய்த ஊழலை பற்றி எழுத அவரது நினைவிடம் மட்டுமல்லாது, மெரினா கடற்கரையே போதாது என, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலையை, அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடிப்போம் என ஆ.ராசா கூறிய கருத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா பற்றி பேச ஆ.ராசாவுக்கு தகுதியில்லை என கூறிய அவர், கருணாநிதி செய்த ஊழலை பற்றி எழுத, அவரது நினைவிடம் மட்டுமல்லாது, மெரினா கடற்கரையே போதாது எனவும் விமர்சித்தார்.

Exit mobile version