விருதுநகரில் பழங்கால கல்வெட்டுகளின் அரிய புகைப்பட கண்காட்சி

விருதுநகரில் தொல்லியல் துறை சார்பில் பழங்கால கல்வெட்டுகளின் அரிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில், சங்ககாலம் முதல் பண்டைய காலம் வரையிலான கல்வெட்டுகளின் அரிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் பண்டையகால அரசியல், வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த அரிய கல்வெட்டுக்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்வெட்டுகளின் புகைப் படங்கள் பற்றி மாணவ மாணவிகளுக்கு துறைசார்ந்த ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

Exit mobile version