மனைவியை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்

 

சென்னை புழலில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு, காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புழல் திருமால் நகரைச் சேர்ந்தவர் நரேஷ் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நரேசுக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த நரேஷ் ஜெயஸ்ரீயை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும்,வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version