பிரத்யேக உடையணிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

சென்னை தண்டையார் பேட்டையில் கொரோனா பாதித்த இடங்களில், கொரோனா பாதுகாப்பு பிரத்யேக உடையணிந்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் 5 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டாம் எனவும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணியும் பிரத்யேக உடையை அணிந்து சீல் வைக்கப்பட்ட இடங்களுக்குள் சென்ற காவல்துறையினர், கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version