ரபேல் ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணை

ரபேல் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

பிரான்சிடம் இருந்து ரபேல் விமானங்களை மத்திய அரசு வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் முறைகேடு நடக்கவில்லை என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை இன்று விசாரிக்க உள்ளது.

Exit mobile version