ஆரணி அருகே 6000 மின் நுகர்வோர்கள் பயன்பெற புதிய துணைமின் நிலையம்

ஆரணி அருகே 6 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில், 4 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள அரியப்பட்டி கிராமத்தில், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சார்பில், 4 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில், துணை மின் நிலையம் அமைக்க அரசாணை வெளியிட்டு, அதற்கான பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனால் இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 6 ஆயிரம் மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version