காரில் வந்து  கொள்ளையடித்த குரங்கு: வைரலாகும் வீடியோ

இயற்கையின் படைப்பில் உருவான உயிரினங்களில் குரங்குகளால் எப்போதும் தொல்லைத்தான். ஆனால் அதெல்லாம் பார்க்கும்போது நமக்கு அளவில்லா மகிழ்ச்சியை தரும். இங்கு ஒருபடி மேலே போய் காரில் வந்து குரங்கு கொள்ளையடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு டோல்கேட்டில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு ஒரு கார் வந்து நிற்கிறது. அதன் ஜன்னல் வழியே வெளியே வரும் குரங்கு அங்கு கட்டணம் வசூலிப்பவர் இருக்கை வழியே சென்று வசூல் பணத்தை தூக்கி கொண்டு செல்கிறது.

இதனை சற்றும் எதிர்பாராத டோல்கேட் ஊழியர் அதனை பிடிக்க முயற்சிக்க அது பிடிகொடுக்காமல் ஓடி விடுகிறது. அதேசமயம் காரில் வந்தவர் குரங்கின் கையில் இருந்த பணத்தை பறிக்க முயல அது எஸ்கேப் ஆகி விட்டது.

இந்தக் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version