சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றவர் மீது மினி லாரி மோதியது

அரியலூரில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றவர் மீது மினி லாரி மோதிய விபத்தின் பதைபதைப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

அரியலூரை சேர்ந்த முருகேசன் என்பவர் உடையார்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பிட்டாளராக உள்ளார். இந்த நிலையில், இவர் தனது பேத்தியுடன் மெடிக்கலுக்கு சென்றுள்ளார். மருந்து வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து பேத்தியை ஏற்ற முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த மினி லாரி மோதியதில் அவர் படுகாயமடைந்தார். நூல் இழையில் பேத்தி உயிர் தப்பிய சிசிடிவி காட்சி நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது. முருகேசன் மீது மினி லாரி மோதிய சம்பவத்தை பார்த்து அவரது பேத்தி துடித்து அழுதார். இதையடுத்து அருகிலிருந்தோர், முருகேசனை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version