கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தோளில் சுமந்து 3 கி.மீ நடக்க விட்டு தண்டனை!

மத்திய பிரதேசத்தில் திருமண பந்தத்தை மீறிய உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குணா மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த பெண், அதே பகுதியில் வசிக்கும் ஆண் நண்பருடன் உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்து ஆத்திரமடைந்த கணவரின் உறவினர்கள், அப்பெண்ணை தாக்கியதோடு, கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தனது தோளில் சுமந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்து செல்ல வேண்டும் என பெண்ணுக்கு தண்டனை வழங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 

 

Exit mobile version