மதுபோதையில் நண்பரை கொலை செய்து நாடகமாடிய நபர்

தரங்கம்பாடி அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்து நாடகமாடிய நபர், கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர், கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவி ராகவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிமாறன் தனது நண்பரான விஸ்வநாதன் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவரும் வீட்டிலேயே மது அருந்தியுள்ளார். இந்த நிலையில், அடுத்த நாள் அதிகாலையில், மணிமாறன் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். பொங்கல் என்பதால் அவசர அவசரமாக காவல்துறைக்கு தெரியாமல் மணிமாறனின் உடலை தகனம் செய்துள்ளனர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம், விஸ்வநாதன்  சரண் அடைந்துள்ளார். அப்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிமாறனை கொலை செய்ததாகவும், வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விஸ்வநாதனை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version