பாட்டிக்கு பாலியல் வன்கொடுமை ; குற்றவாளியை அடித்து கொன்ற ஊர் மக்கள்

ஆந்திர, மாநிலம் சித்தூர் அருகே 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கிராம மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் மண்டலத்திலுள்ள அப்பிகானிபள்ளி கிராமத்தில் 60 வயதான மூதாட்டி ஒருவர் குடும்பத்தார் ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த முர்த்தி என்பவர் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் புகுந்து திருடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஒவ்வொரு முறை மூர்த்தி தவறுகளை செய்துவிட்டு பொதுமக்களிடம் சிக்கும்போதும், அவருக்கு தர்ம அடி கொடுத்து திருந்தி வாழும்படி அவரை மிரட்டி அனுப்பிவைப்பார்கள்.

ஆனால் மீண்டும், மீண்டும் மூர்த்தி அந்த பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்ததால் அவர் மீது அந்த பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், மூதாட்டி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த மூர்த்தி, அக்கம், பக்கம் யாரும் இல்லாததை அறிந்து

நேராக மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று அவரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த 4 சவரன் ஆபரணங்களை பறித்துக்கொண்டு அவரை கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

பின் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

வீட்டில் படுகாயமடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூர்த்தி செய்த செயலால் கடும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தன்னுடைய வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை பிடித்து வெளியே இழுத்து வந்து, பொதுமக்கள் அடித்தே மூத்தியை கொலை செய்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புங்கனூர் போலீசார் மரணமடைந்த மூர்த்தி உடலை கைப்பற்றி, சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version