சின்னதடாகம் அருகே கிணற்றில் லாரி விழுந்த விபத்து : 2 பேர் உடலை மீட்கும் பணி தீவிரம்

கோவை சின்னதடாகம் அருகே கிணற்றில் லாரி விழுந்த விபத்தில் 2 பேர் உடல்களை தேடும் பணி 2வது நாளாக நீடித்து வருகிறது. வீரபாண்டி பகுதியில் உள்ள செங்கல் சூளையிலிருந்து நேற்று முன்தினம் இரவு மணி, செல்வம், மற்றும் பாலமுருகன் ஆகியோர் டிப்பர் லாரியில் சென்றுள்ளனர்.

வீரபாண்டி அருகே லாரி சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த 150 அடி ஆழ கிணற்றினுள் விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் வாகனம் மூலம் உள்ளே இறங்கி மணி என்பவரை மட்டும் மீட்டனர்.

அவருக்கு கால் முறிந்துள்ளதால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் டிப்பர் லாரி மட்டும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து 2 வது நாளாக இருவரது உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version