ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட தமிழரை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

ஈரானில் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழரை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இங்கிலாந்தின் ‘ஸ்டேனா இம்பெரோ’ எண்ணெய் கப்பல் கடந்த 19ஆம் தேதி பாரசீக வளைகுடா வழியாக சென்றுக் கொண்டிருந்த போது, ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்தது. கப்பலில் 18 இந்திய மாலுமிகள் உட்பட 22 பேர் உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாலுமியும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள மாலுமிகளில் சென்னை சேர்ந்த ஆதித்யா வாசுதேவனை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவருடன் மற்ற இந்திய மாலுமிகளையும் மீட்டு தாயகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version