30 ஆயிரம் ரூபாயிக்கு ஏலம் போன ஒரு எலுமிச்சை பழம்

ஈரோடு அருகே கோயில் விழாவில் ஒரு எலுமிச்சை பழம் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி பகுதியை அடுத்துள்ள புது அண்ணாமலைபாளையம் கிராமத்தில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவிலில் மகாசிவராத்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வைக்கப்பட்ட ஒரே ஒரு எலுமிச்சை பழம் மறுபூஜைக்கு பின்பு ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் அதை போட்டி போட்டு ஏலத்தொகையை உயர்த்தியதால் இறுதியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு எலுமிச்சை ஏலம் போனது. அதே போன்று, பூஜையில் வைக்கப்பட்ட வெள்ளிக்காசு 43 ஆயிரம் ரூபாய்க்கும், வெள்ளி மோதிரம் 50 ஆயிரத்திற்கும் பக்தர்கள் ஏலத்தில் வாங்கினர்.

Exit mobile version