சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

ஜெர்மனியில் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 300க்கும் மேற்ப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

ஜெர்மனியில் பருவ நிலை மாற்றம் குறித்தும் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டில் சுற்று சூழல் அமைப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. ஸ்டட்கர்ட் விமான நிலையத்தில் நடந்த இந்த பிரசாரத்தில் தன்னார்வலர்களுடன் 300க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். அடிக்கடி பறக்கும் விமானங்களால் சுற்றுபுற சூழல் மாசடைவதாகவும், விமான நிலையத்தில் எரிபொருளில் விலை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சுற்று சூழலின் பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Exit mobile version