மழை நீர் சேகரிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலையில் மழை நீர் சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து துவங்கிய பேரணி, அண்ணா நுழைவு வாயில் அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version