மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இளையான்குடியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் குழந்தைகளின் குறைபாடு மதிப்பிடப்பட்டு சிகிச்சை பெற அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளி குழந்தைகளும் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Exit mobile version