மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தவர் கொலை: கொலை செய்த 2 பேருக்கும் ஆயுள் தண்டனை

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் கொலை வழக்கில் 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த உ. அம்மாபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் செல்வி என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த முத்தையா என்பவருக்கும் தொடர்பு இருந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பால்பாண்டி, தனது நண்பரான பாண்டி என்பவருடன் சேர்ந்து, 2013ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, இரவு தலையில் கல்லை போட்டு முத்தையாவை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பால்பாண்டி மற்றும் பாண்டி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

Exit mobile version