வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் முன்னரே கடும் பனிப்பொழிவு

கடலூரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சாலையில் பயணம் செய்தனர்.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலங்கள் நிறைவு பெற்றவுடன் பனிப்பொழிவு தொடங்கும், ஆனால், கடலூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையை கடந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் முன்னதாகவே பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது. சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அதிகாமான பனிப்பொழிவு உள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகங்களை ஓட்டிச் சென்றனர்.

 

Exit mobile version