தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க 71 மீனவர்கள் கொண்ட குழு

இலங்கை அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, 71 மீனவர்கள் கொண்ட குழு அந்நாட்டிற்கு சென்றது. எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 183 படகுகள், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக மற்றும் மத்திய அரசுகள் தொடர்ந்து இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தன.

அதன்படி, கடந்த 2018 அக்டோபர் இறுதியில், இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டது. அதன்பேரில், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை மீட்க 9 படகுகளில் 71 மீனவர்கள் கொண்ட குழு இலங்கைக்கு புறப்பட்டுச்சென்றனர். படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version