கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி

ஈரோட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க கோவிட் கேர் மையத்தில் 8ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு, 20 மணி நேரமாக அழைக்கழிப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர், பெருந்துறை தனியார் கல்லூரி கோவிட் கேர் மையத்தில் சிகிச்சையிலிருந்த போது உயிரிழந்தார்.

அவரது உடலை ஒப்படைக்க கோவிட் கேர் மையத்தில் 8 ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாக ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளர், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அவர்கள் தர மறுத்த நிலையில் உடலை ஒப்படைக்காமல் அலைக்கழிப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version