தேர்தல் முடிவன்று பிறந்த குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண்..

மக்களவை தேர்தலின் முடிவுகள் நாடு முழுவதும் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.அன்று பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடியின் பெயரை, இஸ்லாமிய பெண் ஒருவர் சூட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் மேனஜ் பேகம்.அவரின் குழந்தை மே 23 அன்று பிறந்துள்ளது.மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், நரேந்திர மோடியின் பெயரை தனது குழந்தைக்கு சூட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளர் பேகம்.பின்பு, இதுகுறித்து துபாயில் இருக்கும் அவரது கணவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.முதலில் மறுத்த அவர்,பின்பு தனது மனைவியின் ஆசைக்காக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, மேனஜ் பேகம் தனது குழந்தைக்கு ‘நரேந்திர தாமோதரதாஸ் மோடி’என பெயர் சூட்டியுள்ளார்.மோடி போல் அவரது மகனும் திறமை மிக்க மனிதனாக வரவேண்டும் என்பதே அவரது ஆசையாம்.

Exit mobile version