நாட்டின் முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்தை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

சுமார் 20 ஆயிரம் கோடி செலவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க் கப்பலை இந்தியா முற்றிலும் உள்நாட்டிலேயே கட்டமைத்துள்ளது. இந்த கப்பலை கேரளா மாநிலம் கொச்சியில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, விக்ராந்த் போர்க்கப்பலால் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இவ்வளவு பெரிய விமானம் தாங்கி கப்பல்களை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விக்ராந்த போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version