ஐதராபாத்தில் தொழிலதிபரை கடத்தி அடித்து துன்புறுத்திய கும்பல்

ஐதராபாத்தில் நிதி நிறுவன அதிபரை கடத்திய கும்பல், ஒரு கோடி ரூபாய் பெற்று கொண்டு விடுவித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொழிலதிபரை கடத்தி சென்ற அந்த கும்பல் 3 கோடி ரூபாய் கேட்டு அடித்து உதைத்துள்ளனர். இறுதியில் 50 லட்சம் தர தொழிலதிபர் ஒப்புக்கொண்ட நிலையில், ஒரு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு அவரை விடுவித்துள்ளனர். கடத்தல் கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலதிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணத்திற்காக தொழிலதிபரை கடத்தியவர்களை தெலங்கானா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version