பள்ளி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் அடங்கிய கும்பல் கைது

ஒட்டன்சத்திரத்தில் பள்ளி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச்சென்று விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை தேடி வந்த காவல் துறையினர், ராமநாதபுரத்தில் கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை கடத்த பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version