சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீர் தீ

சென்னை தாம்பரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த தாம்பரம் மதுரவாயல் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதனையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Exit mobile version