கும்பகோணத்தில் பெற்ற குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தை

கும்பகோணத்தில் குடும்ப பிரச்சனையில் தந்தையால் ஆற்றில் வீசப்பட்ட 2 குழந்தைகளில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு குழந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அரசலாற்று பகுதியில் வசித்து வரும் ரேணுகா கணவரை பிரிந்து தனது 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். துப்புரவு பணியாளரான இவரது கணவர் ராஜபாண்டி மது போதையில் ரேணுகாவின் வீட்டிற்கு சென்று இரண்டு பெண் குழந்தைகளை கூட்டிச் சென்று அரசலாற்றில் வீசியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ராஜபாண்டிக்கு தர்ம அடி கொடுத்ததோடு ஒரு குழந்தையை உயிருடன் மீட்டனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் வீசப்பட்ட மற்றொரு குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜபாண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version