முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்யப்பட்ட விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முன்பகையால் விவசாயி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே பேடரப்பள்ளியில் ஆண் ஒருவரின் சடலம் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சிக்பாட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தப்பட்டு இறந்த நிலையில் இருந்த ஆணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் அதேப் பகுதியை சேர்ந்த விவசாயம் செய்து வரும் கிருஷ்ணன் என்பதும், அவரது வீட்டருகே வசித்து வரும் அபிலாஷுக்கும், அவருக்கும் 3 ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று  கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை, அபிலாஷ் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியதை விசாரணையில் கண்டறிந்த காவல்துறையினர், அபிலாஷை தேடி வருகின்றனர்.

Exit mobile version