உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாள்!

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளில் அதிமுக சார்பாக அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி 99வது பிறந்த நாளையொட்டி வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில் அதிமுகவின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துக் கொண்டு நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில் மலர் தூவியும், அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர்.

Exit mobile version