செல்போன் கடையில் மனைவியுடன் திருட்டில் ஈடுபட்ட துணை நடிகர் கைது

சென்னையில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடையில் விலையுயர்ந்த செல்போன்களை மனைவியோடு கொள்ளையடித்த துணைநடிகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் செல்போன் கடைக்கு பெண்ணுடன் வந்த இளைஞர் ஒருவர், விலையுயர்ந்த செல்போன்களை திருடியபோது சிசிடிவி கேமராவை பார்த்த கடை ஊழியர்கள், அவர்களை அரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆருண் என்ற தீபக் என்பதும் சின்னத்திரையில் துணை நடிகராக வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு கடைகளில் தனது மனைவிடன் ஆரூண் செல்போன் திருடிய சிசிடிவி பதிவுகள் சிக்கி உள்ளது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version