பழனி மலைக்கோவிலில் நாளை ஒரு நாள் ரோப்கார் வசதி நிறுத்தம்

பழனி மலைக்கோவிலில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக ரோப்கார் சேவை நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலையின் மேல் செல்வதற்கு எளிதாக ரோப்கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒருமாதமும் நிறுத்திவைக்கப்பட்டு பராமரிப்புபணி செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி மாதாந்திர பராமரிப்புப்பணி காரணமாக நாளை ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த உதிரிபாகங்கள் மாற்றப்பட்டு நாளை மறுநாள் முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version