தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த பசு மாடு ஒன்று தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டி நடுக்காடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற போது திடீரென அருகே உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் மாடு கிணற்றில் இருப்பதை அறிந்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version