பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கம்யூனிஸ்ட் பிரமுகர்

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு கோவிலூரை சேர்ந்தவர்கள் சந்திரா மற்றும் செல்வராஜ். அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர், சந்திரா மற்றும் செல்வராஜிடம் இருந்து வீட்டினை விலைக்கு வாங்கி அதில், சில மாதங்கள் தங்கியுள்ளார். பின், வீட்டினை காலி செய்வதாக கூறிய காளியப்பன் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். இதனையடுத்து வீட்டினை காலி செய்யுமாறு காளியப்பனின் மனைவி சுசீலாவிடம் வீட்டின் உரிமையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்குள், அப்பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் பிரமுகர் முத்துசாமி என்பவர், தானாக முன்வந்து, வீட்டினை காலி செய்து தருகிறேன் என்றும், அதற்காக ஒரு லட்சம் ரூபாய் தருமாறும் கேட்டுள்ளார். வீட்டின் உரிமையாளர்கள் பணம் கொடுக்க மறுக்கவே, முத்துசாமி வீட்டினை ஆக்கிரமித்ததுடன், அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், எரியோடு காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Exit mobile version