ஓவியக்கலையை வளர்ப்பதற்கு துடிக்கும் மாணவி

குழந்தைகள் தங்களுக்கு தோன்றியதை வரைவதை நம்மில் பலர் கிறுக்கல்கள் என்கிறோம்.. ஆனால் அவை வெறும் கிறுக்கல்கள் அல்ல.. குழந்தைகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் ஓவியங்கள் என்பதை உணர்த்துகிறார் கடலாடியை சேர்ந்த கல்லூரி மாணவி…

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடியைச் சேர்ந்தவர் ஹிக்மத் கலிமா. கல்லூரி மாணவியான இவருக்கு, சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதே பொழுதுபோக்காக இருந்துள்ளது. தான் பயின்ற ஒவிய கலை அழிந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவியக்கலையை எப்படி வளர்ப்பது சாதனை படைப்பது என யோசித்த ஹிக்மத் கலிமா, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாவட்டம் அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார்

Exit mobile version