குஜராத்தில் தெருவில் சென்றவர்களை முட்டித் தள்ளும் காளை

குஜராத்தில் தெருவில் சென்றவர்களை காளை ஒன்று முட்டித் தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராஜ்கோட்டில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாலையோரம் நின்று கொண்டிருந்த காளை, அவர் அருகில் வந்ததும் திடீரென பாய்ந்து அவரை கீழே தள்ளியது. சற்று நேரம் நின்று பார்த்த முதியவரை மீண்டும் துரத்திச் சென்று தூக்கியது. அருகில் இருந்தவர்கள் முதியவரை மீட்டனர். இந்தநிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு இளைஞனின் வாகனத்தையும் அந்த காளை முட்டித் தள்ளியது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. தெருவில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்திய காளை மீட்ட அப்பகுதி மக்கள் கோசாலையில் விட்டனர்.

Exit mobile version