சொத்து தகராறில் சொந்த தம்பியை குத்தி கொன்ற அண்ணன்

தருமபுரியில் சொத்து தகராறில் உடன்பிறந்த தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தருமபுரி சத்யா நகரைச் சேர்ந்த வெங்கடாச்சலத்திற்கும் அவரது தம்பி நரசிம்மனுக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சொத்துக்காக தம்பியை தீர்த்துக் கட்ட முடிவு செய்த வெங்கடாச்சலம், இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்த நரசிம்மனை வழிமறித்து கத்தியால் மார்பில் குத்தினார். கண்ணிமைக்கும் நொடியில் நடந்த தாக்குதலில் நிலைகுலைந்த நரசிம்மன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான அண்ணன் வெங்கடாச்சலத்தை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த தம்பியை, அண்ணனே குத்தி கொலை செய்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version