எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் உயிரிழப்பு

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கமுதியை அடுத்த திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாமல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி சிவகாசியில் ரத்த தானம் செய்துள்ளார். அந்த எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கும், எச்.ஐ.வி தொற்று பரவியது. இந்த தகவலை அறிந்து, மன உளைச்சலுடன் இருந்த அந்த இளைஞர், சில தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்தநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Exit mobile version